|
May 30
2012
|
பெட்ரோலின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்த்தப்பட்டதன் விளைவாக நாடு முழுவதிலும் பெரும் குமுறல் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசை ஆதரிக்கின்ற கட்சிகளே பகிரங்கமாகப் போராட்டம் நடத்துகின்ற அளவுக்கு நிலைமை முற்றியுள்ளது.
இந்த விலை உயர்வுக்கு யார் பொறுப்பு? இதில் எங்களுக்குப் பொறுப்பில்லை. எண்ணெய் நிறுவனங்கள்தான் விலையை உயர்த்தியுள்ளன என்று மத்திய அரசு கூறுகிற வாதம் ஏற்புடையதல்ல. சாதாரண மக்களைப் பொருத்தவரையில் மத்திய அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்களும் ஒன்றுதான், மத்திய அரசும் ஒன்றுதான்.
சரி, விலையை ஏன் உயர்த்தினார்கள்? உலக நாணயச் செலாவணி மார்க்கெட்டில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறதாம். அதனால் அதிக விலை கொடுத்து கச்சா எண்ணெயை வாங்க வேண்டியிருக்கிறதாம். ஆகவேதான் விலையை உயர்த்தியிருக்கிறார்களாம். பல ஆண்டுகளுக்கு முன்பு இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வந்தது. அப்போது ஏன் பெட்ரோல் விலையைக் குறைக்கவில்லை என்று கேட்டால் அதற்குப் பதில் இராது. இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருகிறது என்றால் அதற்கு மத்திய அரசின் கொள்கைகள்தான் காரணமே தவிர, சாதாரண மக்கள் அல்ல.


